search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் அவதி"

    • பாதாள சாக்கடைகள் அடிக்கடி நிரம்பி சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
    • சாலைகளில் தேங்காதவாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக காளவாசல் உள்ளது. மதுரையில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் காளவாசல் சந்திப்பை கடந்தே தேனி மெயின் ரோடு வழியாக செல்ல வேண்டும். அந்த பகுதி முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் நிரம்பி இருக்கின்றன.

    மேலும் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம் மற்றும் கேரளா செல்லும் புறநகர் பஸ் களும் இங்கு நிறுத்தியே பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெரிசலுடன் காணப்படும். இந்த நிலையில் காளவாசல் சந்திப்பு அருகில் தேனி மெயின் ரோடு பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகள் அடிக்கடி நிரம்பி கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் அவதியடைகின்றனர்.

    அவ்வப்போது பாதாள சாக்கடைகள் அடைப்பு நீக்கி சரி செய்யப்பட்டாலும் மீண்டும் நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. மதுரை மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் இந்த சாலை வழியாகத்தான் அடிக்கடி சென்று வருகின்றனர். இருப்பினும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பஸ் நிறுத்ததிற்கு நடந்து செல்ல பயணிகள் சிரமப்படு கின்றனர்.

    மேலும் சாலை யோரத்தில் வாகனங்களை நிறுத்துபவர்களும், பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களும் மூக்கை பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து அந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளின் அடைப்பை முழுமையாக நீக்கி கழிவுநீர் சீராக செல்லவும், சாலைகளில் தேங்காதவாறும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • காவிரி சாலையில் ரோ ட்டில் நடுவில் தொடர்ந்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
    • இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு காவிரி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.

    இந்த சாலை வழியாக தான் ஈரோட்டில் இருந்து சேலம் மற்றும் சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன.

    அதேப்போல் சேலம், சென்னையில் இருந்து இந்த வழியாக தான் ஈரோடுக்கு பஸ்கள் வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த பகுதியில் சாலை இருபுறமும் நூற்றுக்க ணக்கான நகை, ஜவுளி க்கடைகள், வணிக நிறுவன ங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதேபோல் இந்த பகுதியில் 3 பள்ளிகள் உள்ளன. இதனால் காவிரி சாலை பகுதி எப்போதும் மக்கள் நிறைந்து பரபர ப்பாக காட்சி அளிக்கும்.

    இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகள் நடந்து சேதமடைந்த ரோடுகள் சரி செய்யப்பட்டு புதிதாக தார் சாலை அமை க்கப்பட்டுள்ளது.

    இந்நிலை யில் சாலை நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்புகள் வைக்கப்ப ட்டன. அதாவது காவிரி சாலை கிருஷ்ணா தியேட்டர் முதல் வாய்க்கால் பாலம் வரை சாலையின் நடுவே தடுப்பு கள் அமைக்க ப்பட்டுள்ளன.

    இதில் காந்தி சிலை அருகே தடுப்புகள் இடைவெ ளி இன்றி உள்ளது. இந்த பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இதேப்போல் அல் அமீன் ஸ்கூல் மற்றும் அதன் எதிர்ப்புறம் உள்ள அரசு பள்ளி உள்ளது.

    இந்த பகுதியிலும் தடுப்புகளில் இடைவேளை விடப்பட வில்லை. அங்குள்ள பெ ட்ரோல் பங்க் பகுதிகளிலும் தடுப்புகளில் இடைவெளி வைக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த பகுதியை கடக்க நீண்ட தூரம் சுற்றி வர வேண்டி உள்ளதாக கூறியுள்ளனர்.

    இது குறித்து 40-வது வார்டு கவுன்சிலர் வக்கீல் ரமேஷ் குமார் கூறும்போது,

    ஈரோடு மாநகராட்சியின் முக்கிய போக்குவரத்து பகுதியாக காவிரி சாலை உள்ளது. இந்த பகுதியில் 3 பள்ளிகள், நூற்றுக்கணக்கான ஜவுளி, நகை கடை கள், தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காவிரி சாலையில் ரோ ட்டில் நடுவில் தொடர்ந்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

    காந்தி சிலை அருகே, அல் அமீன் ஸ்கூல், அரசு பள்ளி மற்றும் பெட்ரோல் பங்க் பகுதிகளில் மட்டும் தடுப்புகளில் இடைவெளி விட வேண்டும் என கோரி க்கை வைக்கின்றோம்.

    ஏனென்றால் இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர இது பயனு ள்ளதாக இருக்கும். இல்லையெ ன்றால் நீண்ட தூரம் அவர்கள் சுற்ற வேண்டியிருக்கும்.

    பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த பகுதிகளில் தடுப்புகளில் இடைவெளி விட வேண்டும். இதேபோல் இங்கு அரசு பள்ளி மற்றும் எதிரில் அல் அமீன் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ ர்கள் பெற்றோர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் போக்குவரத்து போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.

    • சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டு வருகிறது
    • வாகனங்கள் குறித்து போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை.

    திருப்பூர் : 

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உடுமலை- பழனி நெடுஞ்சாலை உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கொழுமம் பிரிவு வரை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக மத்திய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து கழுத்தறுத்தான் பள்ளம் வரையில் சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எங்கிருந்து இந்த வாகனங்கள் வருகிறது. எதற்காக அங்கு நிறுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை.

    தேசிய நெடுஞ்சாலையை பார்க்கிங் வசதியாக மாற்றும் வாகனங்கள் குறித்து போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் சாலை அகலமானதற்கான நோக்கமும் வீணாகி உள்ளது. எனவே உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும். இதற்காக போக்குவரத்து போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    பல்லடம்:

    பல்லடத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல்லடம் பகுதியில் உள்ள,அண்ணா நகர், மகாலட்சுமி புரம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். காந்தி ரோடு பகுதியில் உள்ள மகாலட்சுமிபுரம் குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    மழை காலம் வரும்போது இந்தப் பிரச்சினைகள் எழுகின்றது. எனவே முறையாக கழிவுநீர் கால்வாய் வசதி செய்து மழை நீர் தேங்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிச்சிபாளையத்திற்கு செல்ல இந்த சாலை தான் பிரதான சாலையாக உள்ளது.
    • 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான கருவாட்டு பாலம் அருகில் சுமார் 10 மீட்டர் தூரத்திறகு தார் சாலை போடப்படாமல் கடந்த 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிச்சிபாளையத்திற்கு செல்ல இந்த சாலை தான் பிரதான சாலையாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி நிற்கும் குழியில் நிலைத்தடுமாறி பலர் கீழே விழுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கருவாட்டு பாலம் அருகில் 10 மீட்டர் மட்டும் சாலை போடாமல் விட்டுள்ளனர்.

    குண்டும் குழியுமாக காணப்படும் இந்த சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடங்கிறது. இங்கு மட்டும் ஏன் சாலை போடவில்லை என்று தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர்.
    • தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    செங்கல்பட்டு:

    விநாயகர் சதூர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்த பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குசென்றனர்.

    இதேபோல் வடமாநில தொழிலாளர்களும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வழக்கத்தை விட ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ்நிலையத்தில் குவிந்தனர். இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்து ஏறினர். நேற்று மாலை முதல் பலத்த மழை கொட்டியதால் வெளியூர் செல்ல வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அனைத்து அரசு பஸ்கள், மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு முழுவதும் முடிந்ததால் பல பயணிகள் நின்றபடியும் படிக்கட்டில் தொங்கிய படியும் சென்றனர். மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வந்த ஏராளமான பயணிகள் பஸ் கிடைக்காமல் குடும்பத்துடன் தவித்தனர்.

    சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு வரை ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருந்தனர். ஏற்கனவே சென்னையில் இருந்து வந்த பஸ்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பியதால் அவர்கள் செல்ல முடியாத நிலையில் தவித்தனர். சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர். கூடு வாஞ்சேரி பகுதியிலும் நள்ளிரவு வரை பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் தவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிலர் சரக்கு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வேறு வழியின்றி சென்னையில் இருந்து வந்த சரக்கு வாகனங்களில் சென்றனர். அதிலும் இடம் கிடைக்காமல் போட்டி போட்டு ஏறிச்சென்றனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
    • பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் கூட்டுறவு பால் உற்பத்தி (பாண்லே) நிறுவனம் இயங்கி வருகிறது.

    இங்கு 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் புதுவை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிறுவனத்துக்கு புதுவை விவசாயிகளிடமிருந்து 55 முதல் 60 ஆயிரம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள 40 முதல் 50 ஆயிரம் லிட்டர் பால் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது.

    பிறகு கொள்முதல் செய்யப்பட்ட பாலை கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரித்து நீலம், பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் பால் பாக்கெட் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளி மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு பணம் கொடுக்காததால் பால் கொள்முதல் குறைந்தது. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    பிறகு அவர்களிடம் சமாதானம் பேசி, பணத்தை கொடுத்தப் பின் மீண்டும் பால் அனுப்பினர். தற்போது மீண்டும் வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு நிலுவை தொகை செலுத்தாததால் கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பால் காலதாமதமாக வருகிறது.

    மேலும் கடைகளுக்கும் காலதாமதமாக செல்கிறது. மேலும் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என கிடுக்குப்பிடி செய்து வருகின்றனர்.

    தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே பால் கொள்முதல் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதில்லை. இதனால் புதுவையில் மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    மேலும் உள்ளூர் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் கொடுக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலை நீடித்தால் கால்நடை விவசாயிகள் அனைவரும் வெளி மார்க்கெட்டில் பால் விற்பனை செய்யும் நிலை ஏற்படும்.

    தற்போது பாண்லே நிறுவனம் பால், பாட்டில், அட்டை பெட்டி, பிளாஸ்டிக் பாக்கெட் போன்றவை கொள்முதல் செய்ததில் ரூ.25 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    இதனால் உற்பத்தி குறைந்து கடைகளில் போதிய அளவு பாதாம் பால், குல்பி, சாக்லேட் போன்றவை இருப்பு இல்லாமல் உள்ளது. சில பூத் ஏஜெண்டுகள் சில தனியார் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
    • சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். நடந்து செல்பவர்கள் குடைகளை பிடித்த வாரும், ஆங்காங்கே கடைகளில் சிறிது நேரம் இழப்பாறியும் சென்றனர்.

    இது குறித்து அந்தியூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், சித்திரை, வைகாசி மாதங்களில் கூட கடந்து வந்து விட்டோம்.

    அந்த வெயிலை காட்டிலும் தற்போது 2 நாட்கள் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

    மாலை 5 மணி அளவில் தான் வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • சாலைகளில் ஆக்கிரமிப்புகளால் வாகனங்களை தாறுமாறாக விட்டு செல்வதால் 50, 40 அடி சாலை வீதிகள் குறுகி 15 அடிகளாக மாறி வருகிறது.
    • பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழி யர்கள், வாடிக்கையாளர்கள் என பல ஆயிரம் பேர் வந்து செல்வதால் வாகன நெரிசலால் பல விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியில் முக்கியமான சாலையான ஒசூர்-பேரிகை சாலை, ஒசூர்-கிருஷ்ணகிரி சாலை, உள்ளது.

    இந்த சாலைகளில் அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள் , அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், காய்கறி மார்க்கெட், சார் பதிவகம் உள்பட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளால் வாகனங்களை தாறுமாறாக விட்டு செல்வதால் 50, 40 அடி சாலை வீதிகள் குறுகி 15 அடிகளாக மாறி வருகிறது.

    இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என பல ஆயிரம் பேர் வந்து செல்வதால் வாகன நெரிசலால் பல விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.

    இதனால் சாலையில் தடுப்பு சுவர் அமைத்து ஒரு வழி பாதையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 5 கிலோமீட்டர் தாண்டி இருசக்கர வாகனத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
    • தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தோனிரவு, ஜமீலாபாத், செஞ்சியம்மன் நகர், உட்பட்ட கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் தண்ணீர் உப்பாக காணப்படுவதால் வீடுகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பொன்னேரி அடுத்த அரசூர் ஏரியில் இருந்து 15 கிலோமீட்டர் குழாய் மூலம் பழவேற்காடு கீழ்நிலைத் தொட்டியில் சேமிக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தெரு குழாய் வழியாக வீடுகளுக்கு குடிநீர் அனுப்பப்படுகின்றன.

    அவ்வாறு செல்லும் குடிநீர் சரியாக வராததால் குடிநீரின்றி மக்கள், அதிக விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்கியும் மற்றும் 15 கிலோமீட்டர் தாண்டி இருசக்கர வாகனத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

    அப்பகுதி மக்கள் குடி தண்ணிக்காக பெரிதும் அவதிப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் மட்டும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி 41 கிலோமீட்டர் தூரம் மட்டும் நடைபெற்று வருகிறது.
    • தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாகவும் மாறி பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி நக ராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். மொத்தம் 69 கிலோமீட்டரில் 237 தெருக்கள் உள்ளன.

    இந்நிலையில் பொன்னேரி நகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.பின்னர் இடம் தேர்வு செய்வதில் குளறுபடி, நிதி ஒதுக்குவதில் காலதாமதம் காரணமாக பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2018 -ம் ஆண்டு பாதாள சாக்கடைதிட்டப்பணி தொடங்கப்பட்டது. இதனை இரண்டு வருடத்திற்குள் முடிக்க திட்டமிட்டு ரூ.54.78 கோடி ஒதுக்கப்பட்டது.

    ஆனால் பணி தொடங்கி 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாதாளசாக்கடை கால்வாய் அமைக்கும் பணி இன்னும் முடியவில்லை. நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் மட்டும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி 41 கிலோமீட்டர் தூரம் மட்டும் நடைபெற்று வருகிறது.

    வேண்பாக்கம், பழைய பஸ் நிலையம், கள்ளுக்கடை மேடு ஆகிய 3 இடங்களில் கழிவு நீர் சேகரிப்பு தொட்டி, மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பொன்னேரி அடுத்த பெரிய காவனம் ஆரணி ஆற்றின் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. என்.ஜி.ஓ. நகரில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. இங்குள்ள தெருக்களில் குழாய் பதிக்க ஆரம்பிக் கப்பட்ட பணிகள் ஒரு வருடமாக நடைபெற்று வருகின்றன. இதனால் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாகவும் மாறி பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    ஏற்கனவே பொன்னேரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளனர். ஆனாலும் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பணி ஆமைவேகத்தில் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத் கூறும்போது, பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளது. பருவ மழைக்கு முன்பு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமி டப்பட்டு உள்ளது. நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பைப்லைன் புதைத்த பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் போடப் பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மீதமுள்ள பணிகளை முடித்து தரும்போது வீடுகளுக்கு கழிவு நீர் குழாய் இணைப்பு பணி தொடங்கப்படும் என்றார்.

    • மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்தபடி செல்கின்றன.
    • கடும் குளிரால் பொதுமக்கள் 2-வது நாளாக வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால், ஏற்காட்டில் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் உள்ளூர்வாசிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

    இடை இடையே பனிமூட்டமும் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்தபடி செல்கின்றன.

    இதனிடையே காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏற்காட்டில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மற்றும் சாலையில் விழுந்தது.

    இதனால் ஏற்காடு முழுவதும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை சுமார் 40 முறைக்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

    இதனை அதிகாரிகள் சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    மழை மற்றும் பனிக்காற்றின் காரணமாக ஏற்காட்டில் காபி விவசாய தொழில் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டது.

    அதேபோல் கடும் குளிரின் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது. இதனால், ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள், பல்வேறு காட்சி முனைகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    கடும் குளிரால் பொதுமக்கள் 2-வது நாளாக வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    ×